ZdyhY8HZsV1B7iPde0CA 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அத்திவாரம் தோண்டும் பகுதியில் குண்டு மீட்பு!

Share

அத்திவாரம் தோண்டும் பகுதியில் குண்டு மீட்பு!

வீடு கட்டுவதற்கு அத்திவாரம் தோண்டும் பகுதியில் இருந்து வெடிக்காத குண்டு காணப்பட்டதாக வீட்டாரும் அயலவர்களும் அச்சம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விவேகானந்த நகர் பகுதியில் குடியிருப்பதற்கான நிரந்தர வீடு ஒன்றை அமைக்க வீட்டார் பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 11ம் திகதி வீட்டுக்கான அத்திவாரம் தோண்டும் போது அப்பகுதியில் வெடிக்காத நிலையில் குண்டு ஒன்று காணப்படுவதை அவதானித்துள்ளனர்.

இந்த நிலையில் கிராம சேவையாளர் ஊடாக பொலிஸார் உள்ளிட்ட தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும் இன்றுவரை குறித்த குண்டு அகற்றப்படாமையால் வீட்டு உரிமையாளரும் அப்பகுதி மக்களும் அச்சம் வெளியிடுகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் முறைப்பாட்டினையும் பெற்றுள்ளனர்.

இதேவேளை விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபடும் நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட போதிலும் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் கவனத்தில்கொண்டு, பாதுகாப்பான முறையில் அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோருகின்றனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f0b45097e66
செய்திகள்இந்தியாஉலகம்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது: ட்ரம்ப் தகவல்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

image c348b91fcc
செய்திகள்இலங்கை

அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சுய கற்றல் கையேடுகள்

அடுத்த கல்வியாண்டில் இருந்து, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று...

25 68f3476a27f6c
செய்திகள்உலகம்

பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை கட்டாயம்: நாமல் ராஜபக்ச

எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று கட்சியின் தேசிய...

Bangladesh Politics 1 1760710849824 1760710864579
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கத்தின் புதிய சாசனத்திற்கு எதிர்ப்பு: கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் நேற்று ஜூலை சாசனத்தில் கையெழுத்திட்டது. இதற்கு...