இலங்கை
ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம்!
ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பவுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனம்!
உடனடியாக கலந்துரையாடலொன்றை கோரி ஜனாதிபதிக்கு இன்று காலை கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னரே உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் தமது சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொள்வார்கள் என அதன் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பேராசிரியர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டால், உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் கலந்து கொள்ள தயாரென பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
You must be logged in to post a comment Login