arrest
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வயோதிப பெண்மணியை அறையினுள் பூட்டிவைத்து விட்டு திருட முயன்றவர் கைது!

Share

வயோதிப பெண்மணியை அறையினுள் பூட்டிவைத்து விட்டு திருட முயன்றவர் கைது!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வயோதிப பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு தேடிய நபர் ஒருவரை ஊரவர்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

திருநெல்வேலியில் வயோதிப பெண்மணி வசிக்கும் வீடொன்றினுள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர் , வீட்டில் இருந்த வயோதிப பெண்ணை வீட்டினுள் உள்ள அறை ஒன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு தேடுதல் நடாத்தியுள்ளார்.

அவ்வேளை அறையினுள் பூட்டப்பட்டு இருந்த பெண்மணி அபாய குரல் எழுப்பவே, அயலவர்கள் வீட்டிற்கு சென்ற போது , வீட்டினுள் இருந்து நபர் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

அதனை அடுத்து வீட்டினுள் சென்று பார்த்த போது வயோதிப பெண் அறை ஒன்றினுள் வைத்து பூட்டப்பட்டு இருப்பதனை அவதானித்து அறையை திறந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.

அதேவேளை வீட்டில் இருந்த பொருட்கள் கலையப்பட்டு காணப்பட்டன.

அதனை அடுத்து , வீட்டில் இருந்து தப்பி சென்ற நபரை ஊரவர்கள் தேடி மடக்கி பிடித்து விசாரணைகளை மேற்கொண்ட போது , அந்நபரிடம் 25 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் அவரது பையில் , பித்தளை பொருட்கள் சிலவும் காணப்பட்டுள்ளன.

அதேவேளை குறித்த நபரிடம் தன்னை அடையாளப்படுத்த கூடிய எந்த ஆவணங்களும் இருக்கவில்லை.

அதனை அடுத்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கி , பொலிஸாரிடம் அந் நபரை ஒப்படைத்துள்ளனர். அந்த நபரை கைது செய்த கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை கடந்த சனிக்கிழமை நெடுந்தீவு பகுதியில் வயோதிபர்கள் ஐவர் படுகொலை செய்யப்பட்டு , அவர்களின் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் , இந்த சம்பவம் குறித்த வீட்டின் அருகில் வசிக்கும் அயலவர்கள் மத்தியில் மேலும் பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

25 690304e16a39e
அரசியல்இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: ஆயுதம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள்...

25 690332f7d691e
இலங்கைஉலகம்செய்திகள்

கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற இருப்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

2025 ஒக்டோபர் 27 ஆம் திகதி, கனடா அரசாங்கம் தனது Express Entry அமைப்பின் மாகாண...

25 690349f3051fc
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றில் கேலிக்கூத்து நடக்கிறது; வயது முதிர்ந்த ரணிலை விடுங்கள் – டயானா கமகே

ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய தலைவர் கட்சிக்குள் இளைஞர்களை சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு தலைமைப் பதவியை...