law
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நெடுந்தீவு படுகொலை – 48 மணிநேர விசாரணைக்கு பணிப்பு!

Share

நெடுந்தீவு படுகொலை – 48 மணிநேர விசாரணைக்கு பணிப்பு!

நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 2 நாள்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்று அனுமதியளித்தது.

“சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட சில சான்றுப்பொருள்களை நெடுந்தீவுக்கு அழைத்துச் சென்று மீட்க்கப்படவேண்டும் மற்றும் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள பொலிஸ் தடுப்பில் வைத்திருக்க யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் முன்வைத்த விண்ணப்பத்துக்கு அமைய 2 நாள்கள் அனுமதியளித்த மன்று நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை மன்றில் முற்படுத்த உத்தரவிட்டது.

நெடுந்தீவு மாவிலி இறங்குதுறையை அண்டிய 12ஆம் வட்டாரத்தில் கடற்படை முகாமுக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

100 வயது மூதாட்டி ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுல செனரத்தின் கட்டளையில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் விஷாந்தின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பொலிஸ் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நெடுந்தீவில் நடமாடிவிட்டு நேற்றுக் காலை அங்கிருந்து வெளியேறிச் சென்ற நபரை புங்குடுதீவில் வைத்து நேற்றிரவு கைது செய்தனர்.

ஜேர்மனியில் கொலை முயற்சி வழக்கொன்றில் குற்றவாளியாகக் கண்டறிந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு 51 வயது நபரே கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து அதிகளவு தங்கநகைகள் கைப்பற்றப்பட்டன.

அதுதொடர்பில் விசாரணை மேற்கொண்ட போதே சந்தேக நபர் தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

சந்தேக நபர் இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதன்போது சந்தேக நபர் கொலைக்கு பயன்படுத்தி கத்தி உள்ளிட்ட சான்றுப்பொருள்கள் மீட்கப்படவேண்டும் என்பதுடன் மேலதிக தகவல்களை பெறவேண்டும் என்பதனால் ஒரு வாரம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்திருக்க அனுமதி கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

விண்ணப்பத்தை ஆராய்ந்த மன்று இரண்டு நாள்கள் அனுமதியளித்ததுடன், சந்தேக நபரை நாளைமறுதினம் மன்றில் முற்படுத்த உத்தரவிட்டது.

இதேவேளை, ஊர்காவற்றுறை பொலிஸாரின் அசமந்தத்தினால் சந்தேக நபரை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது என்று யாழ்ப்பாணம் மாவட்ட மூத்த பொலிஸ் அதிகாரி கவலை வெளியிட்டார்.

எனினும் புங்குடுதீவு இளைஞர்களின் முயற்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவான தமிழ் பொலிஸ் குழுவின் துரித முயற்சியினால் கொலைச் சம்பவம் நடைபெற்று 24 மணிநேரத்துக்குள் கொலையாளியை கைது செய்ய முற்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் தமிழ் பொலிஸ் அதிகாரிகள், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் முன்னின்று துரித விசாரணைகளை முன்னெடுப்பதை பொலிஸ் தலைமையகம் உள்ளிட்ட பொலிஸ் உயர்மட்டம் வரவேற்பதாகவும் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் உயர் அதிகாரி பாராட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 84
செய்திகள்உலகம்

இஸ்லாமாபாத்தில் சரித்திர முக்கியத்துவமிக்க பேச்சுவார்த்தை: ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானியக் குழுவினரைச் சந்தித்தார் ஷெபாஸ் ஷெரீப்!

மத்திய கிழக்கில் கடந்த பெப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...