இலங்கை

முட்டை இறக்குமதியால் மேலும் நெருக்கடி!!

Published

on

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், நாட்டில் முட்டை தட்டுப்பாடு விரைவில் நெருக்கடியாக மாறும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் எச்சரித்துள்ளது.

முட்டையை இறக்குமதி செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை தொடர்ந்து, உள்ளூர் சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

மேலும், முட்டை உற்பத்தியாளர்கள் தாய்க் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதால் வரும் வாரத்தில் நிலைமை மோசமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version