paffrel
அரசியல்இலங்கைசெய்திகள்

தேர்தலை நடத்துவது சாத்தியமில்லை!!

Share

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமைக்கு அமைய எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதியன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை என்று சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) தெரிவித்துள்ளது.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவத்த பஃப்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

அரசாங்கம் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் என்று தாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றும் நீதிமன்ற தீர்ப்புகளைக்கூட புறக்கணிக்கும் நிலையில் இருப்பது வருந்தத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

ஜனநாயகத்தின் மூன்று தூண்களான சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் சமநிலை இப்போது முற்றிலும் சீர்குலைந்துள்ளது என்றார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தாமதப்படுத்த சதி செய்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர், பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் நீதிமன்றத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி தற்போது சட்டமன்றமும் தேர்தலை தாமதப்படுத்தச் செயல்படுவதாக குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

800 மில்லியன் ரூபாய் ஊழல்: அர்ஜுன ரணதுங்க மற்றும் தம்மிக ரணதுங்கவிற்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) சுமார் 800 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தியதாகச் சுமத்தப்பட்டுள்ள ஊழல்...

20 19
செய்திகள்விளையாட்டு

சேப்பாக்கத்தில் சிஎஸ்கே ‘ரோர் 26’ ரீயூனியன் விழா: தோனி, ரெய்னா வருகையால் ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் வரும் மார்ச் 28ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், சென்னை...

19 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஏப்ரல் மாதம் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதம்!

இலங்கை நாடாளுமன்றம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் மீண்டும்...

18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...