strick 1
இலங்கைசெய்திகள்

போராட்டத்தில் குதித்தன தொழிற்சங்கங்கள்!!

Share

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பல தொழிற்சங்கங்கள் இன்று(15) பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.

போராட்டத்தின் பிரதான கோரிக்கைகளாக

வங்கி வட்டி வீதத்தை குறைத்தல்
20000 ரூபாய் வாழ்க்கைச் செலவு நிவாரணத்தை வழங்குதல்
மின்சார கட்டணத்தை குறைத்தல்
ஓய்வூதிய குறைப்பை உடனடியாக நிறுத்துதல்

ஆகியன முன்வைக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஏழாவது நாளாக இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றையதினம் நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தொழிற்சங்க போராட்டத்துக்கு ஆதரவாக வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் தலைவர் வி.விஜயகுமார் கோரியுள்ளார்,

தொழிற்சங்க நடவடிக்கையில் வைத்தியர்கள் ஈடுபட்டாலும் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் இயங்குமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ் போதனா வைத்தியசாலை கிளையின் தலைவர் எஸ்.மதிவாணண் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற வைத்தியர்கள் தனியார் வைத்தியசாலைகளிலும் சேவையில் ஈடுபட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்

தொழிற்சங்க போராட்டத்திற்கு மத்தியிலும் ரயில்வே ஊழியர்களின் அர்ப்பணிப்புடன், இன்று காலை 8 மணி வரை பயணிகளின் வசதிக்காக 20 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் உறுதிப்படுத்தினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சந்திரிக்காவின் நன்கொடை பாராட்டுக்குரியது: எதிர்க்கட்சிகளின் அரசியல் வங்குரோத்து குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க விமர்சனம்!

ஊழலற்ற அரச நிர்வாகத்தை அமுல்படுத்தியுள்ளதால் தான் உலக நாடுகள் அனைத்தும் ஜனாதிபதி மீது நம்பிக்கை கொண்டு...

25 6939a0f597196
இலங்கைசெய்திகள்

சூறாவளியால் இலங்கைக் கரையோரப் பகுதி 143 கி.மீ மாசு: குப்பைகளை அகற்ற 3 வாரங்கள் ஆகும்!

‘திட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, இலங்கையின் கரையோரப் பகுதியில் 143 கிலோ மீற்றர்...

25 6939a5588b95b
இலங்கைசெய்திகள்

மூன்றாம் தவணையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறைமை இல்லை: பரீட்சைகள் இரத்து!

இந்த ஆண்டு மூன்றாம் தவணை முடிவில் பாடசாலை மாணவர்களுக்கு எந்த விதத்திலும் மதிப்பெண் வழங்கும் முறைமை...

images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...