இலங்கை

பல்கலை மாணவர்கள் கைது!

Published

on

களனி பகுதியில் நேற்றிரவு (08) ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த பல்கலைக்கழக மாணவர்களில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களனி பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கெலும் முதன்நாயக்க மற்றும் மாணவர் செயற்பாட்டாளர் ஹர்ஷன திஸாநாயக்க ஆகியோரை விடுதலை செய்யுமாறு கோரி மாணவர்களினால் இந்த எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.

அத்துடன், நேற்றிரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த களனி பல்கலைக்கழக மாணவர்களில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை இன்றைய தினம் மஹர நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version