image e07834ef95
இலங்கைசெய்திகள்

அதிகரிக்கும் வாழ்க்கைச்செலவு – ஆண்களும் பாலியல் தொழிலில்

Share

இலங்கையைச் சேர்ந்த பல குடும்பங்களின் சமீபத்திய வாழ்வாதாரத் தொழிலாக விபச்சாரம் உருவெடுத்துள்ளது. அதிகளவான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் அதே வேளையில், 20 – 40 வயதுக்கு இடைப்பட்ட ஆண்களும் தற்போது வாழ்வாதாரத்திற்காக இந்தத் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

குறித்த தொழில்துறையில் இருப்பவர்களின் கருத்துப்படி, இலங்கையின்  பொருளாதாரத்துறை வெகுவாக மோசமடைந்து வரும் கடந்த சில மாதங்களுக்குள், பெருமளவிலான ஆண்கள் பாலியல் வலைத்தளங்களில் தம்மைப் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

இந்த வலைத்தளங்களில் இலங்கை என்ற பிரிவுக்குள் தேடும் போது பட்டியலிடப்பட்ட இலங்கை ஆண்கள்  20 தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் அவர்களுக்கான கட்டணம் சேவையைப் பொறுத்து தீர்மானி்க்கப்படுகிறது.

பெரும்பாலும் 20 அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 500 அமெரிக்க டொலர்கள் வரை இவர்களுக்கான  கட்டணம் சேவையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.

வேலையின்மை மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவின் சுமையினால், தான் இந்தத் தொழில்துறைக்கு வர நிர்ப்பந்திக்கப் பட்டதாக அவர் தெரிவித்தார். அழைப்புகள் மற்றும் சேவையைப் பொறுத்து ரூபா 15000 முதல் ரூபாய் 50000 வரை தான் பெறுவதாகவும் இந்தத் துறையில் விரைவாக பணம் சம்பாதிக்க முடிவதால் அதைத் தனது குடும்பத்திற்கு தர முடிவதாகவும், தான் எப்படியும் ஒவ்வொரு வாரமும் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்படுவதாகவும் 22 வயதான பாலியல் தொழிலாளி தெரிவித்தார்.

ஆண்களோ அல்லது பெண்களோ பாலியல் சேவைகளை வழங்கும் இணையத்தளங்களைச் செயற்படுத்துவது சட்டவிரோதமானது.  மேலும் அது இரு தரப்பிலும் பரஸ்பரமாக ஒருமித்த  தொடர்பாக இருப்பதாலும் சட்டபூர்வ பணப்பரிமாற்றம் நடைபெறாததாலும் இந்த வர்த்தகத்தை அடையாளம் காண்பது இலகுவானதல்ல என பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்பிட்ட ஒரு சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்படாதவிடத்து  விசாரணைகளை மேற்கொள்ளவோ மேலதிக தகவல்களைப் பெறவோ முடியாதென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....