இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்!!

Share
gov 1
Share

420 பொது நிறுவனங்களில் 32 நிறுவனங்கள் அதிக ஊழல் மற்றும் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியவை என கோப் குழு அடையாளம் கண்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.

இந்த நிறுவனங்கள் மூன்று வருடங்களில் 46,500 கோடி ரூபா நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்களைக் கவனிப்பதற்காகவே இன்று சில நிறுவனங்கள் இயங்குவது வேதனையான விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வினைத்திறன் அற்ற அரச நிறுவனங்களை வினைத்திறனுள்ள நிலைக்குக் கொண்டு வருவதற்கான பொறிமுறையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

அரசாங்க வேலைகள் தொடர்பில் முறையான கணக்காய்வு மற்றும் தலையீடு அவசியமானது எனவும் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

சில நிறுவனங்கள் பயனற்ற திட்டங்களைக் கொண்டு வந்து பண மோசடி செய்வதாகவும், இந்த நிறுவனங்களைக் காப்பாற்ற தனியார்மயமாக்கல் தீர்வாகாது என்றும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...