Eran Wickramaratne
இலங்கைசெய்திகள்

வரி விதிப்பை இரட்டிப்பாக்குங்கள்!

Share

அரசாங்கம் தற்போதுள்ள 1 இலட்சம் ரூபா வரி வரம்பை உடனடியாக குறைந்தது 2 இலட்சமாக அதிகரிப்பதன் மூலம் நடுத்தர வர்க்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

அதிக வருமானம் ஈட்டுபவர்களின் வரி சதவீதத்தை அதிகரிப்பதன் மூலம்  முன்மொழியப்பட்ட வருவாய் இழப்பை ஈடுசெய்ய முடியும் என்று அவர் பரிந்துரைத்தார்.

எனவே, 1 இலட்சம் ரூபாய் வரி வரம்பை உடனடியாக குறைந்தது 2 இலட்சமாக உயர்த்தி நடுத்தர வர்க்க ஊழியர்களைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

உழைக்கும் மக்கள் வருமானத்தை இழந்து பெரும் வரிச்சுமையால் மக்கள் வீதிக்கு வரும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இதனால் உணவுப் பாதுகாப்பின்மை, அதிகரித்த போஷாக்குக் குறைபாடு, நோய்களைத் தடுப்பது என்பன மக்களுக்குப் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...