korea
இலங்கைசெய்திகள்

கொரியாவில் வேலைவாய்ப்பு – 85 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Share

தென் கொரியாவில் உற்பத்தி மற்றும் மீன்பிடித் துறைகளில் காணப்படும் வேலை வாய்ப்பிற்காக, இலங்கை இளைஞர் யுவதிகளை தெரிவு செய்வதற்காக, 2023 ஆம் ஆண்டு நடத்தப்பட உள்ள 7 ஆவது கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்காக 85,072 இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கு 31,378 பேர் விண்ணப்பித்தனர். இம்முறை அதற்கும் மேலதிகமாக அதிக எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான பதிவுகள் கடந்த 2023.02.13 முதல் 2023.02.23 ஆம் திகதி வரை ஒன்லைன் ஊடாக இடம்பெற்றன என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டைகள் தற்போது பணியகத்தினால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, உற்பத்தித் துறையுடன் தொடர்புடைய வேலை வாய்ப்புக்களுக்கான கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சை எதிர்வரும் 2023 மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், மீன்பிடித் துறை வேலை வாய்ப்புக்களுக்கான பரீட்சை, எதிர்வரும் 2023 செப்படம்பர் மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பரீட்சைகள் பன்னிப்பிட்டி கொரிய பரீட்சை நிலையத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...

images
செய்திகள்இலங்கை

மீட்புப் பணிகள் நடக்கும் இடங்களில் ட்ரோன்களைப் பறக்க விட வேண்டாம்: இலங்கை விமானப்படை எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரழிவு காரணமாகப் பல பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், அப்பகுதிகளில்...

24 6717c3776cee3
செய்திகள்இலங்கை

சீனாவின் பாரிய நிவாரண உதவி: இலங்கைக்காக 1 மில்லியன் அமெரிக்க டாலர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பேரழிவின் தாக்கத்தில் இருந்து இலங்கை மீள்வதற்காக, சீனா அரசாங்கம் இரண்டு வகைகளில்...

download
செய்திகள்இலங்கை

கண்டி மாவட்டத்தில் விமானம் மூலம் நிவாரணப் பொருட்கள் விநியோகம்: தரைவழியாக அணுக முடியாத பகுதிகளுக்கு உதவி!

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக தரைவழியாக அணுக முடியாத பகுதிகளில் சிக்கித் தவிக்கும்...