doctor
இலங்கைசெய்திகள்

தொழிற்சங்க நடவடிக்கையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Share

புதிய வரிக் கொள்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் சில இன்று (08) வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக கொழும்பு ஹைட் பூங்காவில் பாரிய எதிர்ப்பு பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புதிய வரி திருத்தத்திற்கு எதிராக வங்கி ஊழியர்களும் இன்று மதியம் 12.30 மணி முதல் சேவையில் இருந்து விலகத் தயாராகி வருவதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, துறைமுக ஊழியர்களும் இன்று சட்டபடி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை துறைமுக சுதந்திர பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்தார்.

இதேவேளை, இன்று சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் அரச நிறைவேற்று அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளதாக அரச நிறைவேற்று அதிகாரிகளின் கூட்டுக் குழுவின் தலைவர் எச்.ஏ.எல்.உதயசிறி மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...