இலங்கை
வீட்டை உடைத்து திருட்டு! – சாவகச்சேரியில் திருடன் மடக்கிப்பிடிப்பு
வீட்டை உடைத்து திருட முற்பட்ட திருடன் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.
இந்தச் சம்பவம் யாழ்.சாவகச்சேரி வடக்கு , மண்டுவில் பகுதியில் நேற்று காலையில் இடம் பெற்றுள்ளது.
வீட்டவர்கள் காலையில் வெளியிடத்துக்கு சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டும் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
திருடன் கதவை உடைக்கும் சத்தம் கேட்டதும் சுதாகரித்துக்கொண்ட வீட்டிலிருந்தவர் அயலவர்களின் உதவியோடு திருடனைப் பிடித்துள்ளார்.
அதன் பின்னர் திருடனை நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: 128 ஆண்டுகளாக மம்மியாக பதப்படுத்திவைக்கப்பட்ட திருடனின் உடல் அடக்கம் - tamilnaadi.com