Power cut
இலங்கைசெய்திகள்

மின்வெட்டு குறித்து அறிவிப்பு!

Share

நாடளாவிய ரீதியில் பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் அமுல்படுத்தப்டும் மின்வெட்டு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை தொடரும் என, மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, புதன்கிழமை (30) தெரிவித்தார்.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆம் அலகு, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி திட்டமிட்டபடி தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட பின்னர், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் இரவு நேர மின்வெட்டு 1 மணித்தியாலமாக குறைக்கப்படும் என்றார்.

மேலும், சுற்றுலா அமைச்சினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும் அதன்பின்னர், இரவு நேர மின்வெட்டுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, தென் மாகாணம் மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசெம்பர் 1ஆம் திகதி முதல் இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 694ededb0ff94
செய்திகள்உலகம்

ஜப்பான் டயர் தொழிற்சாலையில் ஊழியர் நடத்திய கத்திக்குத்து: 15 பேர் காயம், 5 பேர் நிலை கவலைக்கிடம்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள மிஷிமா (Mishima) நகரில் அமைந்துள்ள வாகன டயர் உற்பத்தித் தொழிற்சாலையில்,...

articles2FamQmNaW4XK0qSBeE32Ow
செய்திகள்இலங்கை

மத்திய மாகாணத்தில் 160 பாடசாலைகளுக்கு நிலச்சரிவு அபாயம்: விரிவான அறிக்கை பிரதமரிடம் சமர்ப்பிப்பு!

மத்திய மாகாணத்தில் நிலச்சரிவு அபாயத்தில் உள்ள பாடசாலைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய கட்டிட...

25 694f2ec30f150
செய்திகள்இலங்கை

அதிபர் தாக்கியதில் மாணவன் படுகாயம்: 8 நாட்களாக வைத்தியசாலையில் அனுமதி – அரசியல் தலையீடெனப் பெற்றோர் குற்றச்சாட்டு!

சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மாணவன் மீது நடத்திய மனிதாபிமானமற்ற தாக்குதலால், பாதிக்கப்பட்ட...

image 64d1628410
உலகம்செய்திகள்

சிரியா பள்ளிவாசலில் குண்டுவெடிப்பு: வெள்ளிக்கிழமை தொழுகையின் போது 8 பேர் பலி, 18 பேர் காயம்!

சிரியாவின் மூன்றாவது பெரிய நகரமான ஹோம்ஸில் (Homs) உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (26) வெள்ளிக்கிழமை...