mahinda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வதேசத்தின் பிடியில் இலங்கை! – கூறுகிறார் மஹிந்த

Share

இலங்கையின் பொருளாதாரத்தின் பின்னணியில் சர்வதேச சக்தியொன்று செயற்படுவதாகவும், இந்த சக்தி இன்னும் செயற்படுவதாகவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதத்தின் போதே முன்னாள் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர்,

இந்த சக்திகளின் உள்ளூர் முகவர்கள் இன்னும் செயலில் உள்ளனர்.தேசத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு நிதியுதவி செய்தவர்கள் அவர்கள்தான். அவர்களின் நடவடிக்கை சுற்றுலாத் துறையை பாதிக்கிறது, இது இப்போது மீண்டு வரத் தொடங்கியுள்ளது.

பாதுகாப்பு ஒதுக்கீடு தொடர்பில் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு நாட்டின் பாதுகாப்பு எல்லாவற்றையும் விட முக்கியமானது என்பதை நான் அவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். தேசத்தின் பாதுகாப்பை ஆபத்தில் ஆழ்த்துவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.

வரவு -செலவுத் திட்டம் 2023 சில துறைகளின் அபிலாஷைகளை நிறைவேற்றவில்லை என்றாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான மாபெரும் பாய்ச்சலாகும். வரவு -செலவுத் திட்டத்தில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. நஷ்டத்தில் உள்ள அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்.

இருப்பினும் இலாபம் ஈட்டும் நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தேசிய சொத்துக்களை வெளிநாட்டு சக்திகளுக்கு விற்பதற்கு நாங்கள் எதிரானவர்கள்” என்றும் கூறினார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
875262697 1
இலங்கை

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்கள் மூலம் பணம் பறித்த கும்பல் கைது!

நோய்வாய்ப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டு, பணம் பறித்து வந்த கும்பலைச் சேர்ந்த மூவரை...

image 1000x630 13
இலங்கை

குற்றவாளிகளைப் பிடிக்க இன்டர்போல் உதவி: குற்றவாளிகளை நாடு கடத்த நடவடிக்கை

குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நேர்மறையான நடவடிக்கைகளை இன்டர்போல்  பாராட்டியுள்ளது. இதன் தொடர்ச்சியாக,...

image 1000x630 12
செய்திகள்Featuredஇலங்கை

செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது

இஷாரா செவ்வந்திக்கு உதவிய குற்றச்சாட்டு: பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின்...

Gold Rush Returns The Soaring Price of Sovereigns and the Stories from Sea Street
செய்திகள்இலங்கை

அதிரடி விலை உயர்வு: இலங்கையில் ஒரு பவுன் தங்கம் ரூ.4 இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 24 கரட் ஒரு பவுன்...