EGG 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முட்டைக்கு பெரும் தட்டுப்பாடு!

Share

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையில் முட்டைகளை விற்பனைச் செய்ய முடியாமையால், ஹட்டன் நகரிலுள்ள முட்டை வியாபாரிகள் பலர், முட்டைகளை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டனர். இதனால் நகரில் முட்டைக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

சில கடைகளில் முட்​டையொன்று 55 ரூபாய் முதல் 57 ரூபாய் வரைக்கும் விற்பனைச் செய்யப்படுகின்றது. எனினும், சில முட்டைக்கடைகளில் முட்டையொன்று 50 ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்படுகின்றது. எனினும், அவ்வாறான கடைகளில் முட்டை விற்பனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

எனினும், முட்டையின் மொத்த விலை 52 ரூபாய் முதல் 54 ரூபாய் வரையிலும் அதிகரித்துள்ளது. இந்த நிலைமையினால் முட்டைகளை விற்பனைச் செய்ய முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என முட்டை வர்த்தகத்தில் ஈடுபடு​வோர் தெரிவித்தனர்.

முட்டை வர்த்தகத்தை மட்டுமே செய்யாமல், இதர சில்லறை பொருட்களையும் விற்பனைச் செய்யும் வர்த்தகர்கள், ஏனைய பொருட்களை விற்க வேண்டும் என்பதற்காக, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் முட்டையை விற்பனைச் செய்கின்றனர் என்றும் முட்டை வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...