world bank
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஆதரவு – உலக வங்கி தெரிவிப்பு

Share

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ்ஸிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எகிப்தின் ஷாம் அல் ஷேக் நகரில் நடைபெற்றுள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டுடன் இணைந்ததாக இந்தச் சந்திப்பு முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் சவாலுக்குள்ளாகியுள்ள பேரண்டப் பொருளாதாரம் மற்றும் சமூக நிலைமை தொடர்பில் உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இதன்போது கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பின்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டியதன் உடனடி தேவைக் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய கடன் நெருக்கடிக்கு, உரிய தீர்வை உரிய நேரத்தில் காண வேண்டியது அவசியமென வலியுறுத்திய உலக வங்கிக் தலைவர் மல்பாஸ், கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுக்களை உரிய தரப்புக்களுடன் தொடருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஊக்குவித்தார்.

இலங்கை அரச துறையிலுள்ள அதிகரித்த ஊழியர் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு பொதுச் செலவினங்களை வினைத்திறனுடன் கையாள்வதற்கான வழிகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு அவசியமான மறுசீரமைப்புக்களை முன்னெடுப்பது குறித்தும் உலக வங்கித் தலைவர் மல்பாஸ் மற்றும் ஜனாதிபதி விக்ரமசிங்க ஆகியோர் கலந்துரையாடினர்.

இலங்கை மக்களின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், நிலையான தனியார்துறையின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை உருவாக்குவதற்கும் அவசியமான சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் (IDA) சலுகை அடிப்படையிலான நிதியுதவி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை கொள்கை ஆலோசனைக்கமைய உலக வங்கிக் குழுமம் (WBG) வழங்கும் என்றும் அதன் தலைவர் இதன்போது உறுதியளித்தார்.

விவசாய உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான உரப் பயன்பாடு மற்றும் பெறுமதியை அதிகரிப்பதற்கான வழிவகைகள் குறித்தும், சேவைத்துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் சுற்றுலா மற்றும் கல்வி ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

காலநிலை மாற்றம் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்களைத் தணிப்பதற்கும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான நிதி தேவை என்பன தொடர்பிலும் இச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1755232595226130 0
இலங்கைசெய்திகள்

இலங்கை சுங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரூ. 910 மில்லியனுக்கும் அதிக மதிப்பு உப்பு

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 22,950 மெட்ரிக் தொன் உப்பை இலங்கை சுங்கம் தடுத்து வைத்துள்ளதாக சுங்க...

292a7af3 f588c163 e7655f0e 0298d802 80f489e3 0508342b sarath weerasekera 1 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped
செய்திகள்அரசியல்இலங்கை

13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வடக்கு மாகாணம் சுயாதீனமாகும்” – சரத் வீரசேகர அச்சம்

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுமானால், இலங்கை சமஷ்டி நாடாக மாறி, வடக்கு...

images 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ‘கொள்கைக் கூட்டு’ முடிவுக்கு வருகிறது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிரெதிராக தனித்தனியே எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்கு சின்னத்தில்...

25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...