image cb6b371e3f
இலங்கைசெய்திகள்

ஆசீர்வாத பூசைக்கு 8 கோடி!!!

Share

திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி மற்றும் கிறிஸ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோர் 8 கோடி ரூபாயை ஆசீர்வாத பூசைக்கு, பூசாரி ஒருவருக்கு வழங்கியுள்ளனர் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் அறிவித்தனர்.

திலினிக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டு குறித்து கைது செய்யப்பட்ட ஜானகி சிறிவர்த்தனவை கொழும்பு மேலதிக நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே மேற்குறிப்பிட்ட விடயம் அறிவிக்கப்பட்டது.

முறைப்பாடு செய்தவர்களிடம் இருந்து திலினி பிரியமாலி பெற்ற பணம், கிறிஸ் குழும அலுவலகத்தில் ஜானகி சிறிவர்தனவுக்கு வழங்கப்பட்டமை குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளதாக, சீ.ஐ.டியினர், மேலதிக நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

ஜானகி சிறிவர்தன, பணிப்பாளராக பதவி வகிக்கும் கிறிஸ் குழுமம் இந்தியாவில் இருந்து பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும், கடந்த காலங்களில் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் சீ.ஐ.டியினர் சுட்டிக்காட்டினர்.

பாரிய பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு இந்த மோசடிகளை செய்வதற்கு உதவினார் என்று கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்ட ஜானகி சிறிவர்தன, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...