8f91fb36 b303c494 8f6cd2ab threewheel
இலங்கைசெய்திகள்

கட்டணங்கள் குறைக்கப்படாது!

Share

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டாவை அரசாங்கம் இரட்டிப்பாக்கிய போதும், கட்டணக் குறைப்பு சாத்தியமில்லை என்று முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நாளாந்தம் 5 லீற்றர் அடிப்படையில் 6 நாட்களுக்கு 30 லீற்றர் பெற்றோல் வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதும் 5 லீற்றர் பெற்றோல் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

உராய்வு நீக்கி எண்ணெய், டயர்கள், டியூப்கள், பட்டரிகள் மற்றும் வாகன சேவைக் கட்டணங்கள் மீதான வரிகள் இன்னும் அதிகமாக இருப்பதால், சேவையைத் தொடர இந்த அதிகரிப்பு உதவாது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

480 ரூபாயாக இருந்த பெற்றோல் 3 தடவைகளில் 370 ரூபாய் வரை குறைக்கப்பட்ட போதும் தமக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படாமை காரணமாக கட்டணத்தை குறைக்க முடியவில்லை என்றும் சங்கம் தெரிவித்தது.

மேல் மாகாண முச்சக்கர வண்டிகளுக்கு நவம்பர் 1ஆம் திகதி முதலும் ஏனைய மாகாண முச்சக்கர வண்டிகளுக்கு நவம்பர் 6ஆம் திகதி முதலும் 10 லீற்றர் எரிபொருள் வழங்குவதற்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என வலுச்சக்தி அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FUIXfciu0r8En4NCdFEIo
செய்திகள்உலகம்

தென் கொரிய முன்னாள் முதல் பெண்மணிக்கு சிறைத்தண்டனை: லஞ்சம் மற்றும் விலையுயர்ந்த பரிசுகளைப் பெற்றதாக நீதிமன்றம் தீர்ப்பு!

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலின் (Yoon Suk...

1769590369 images 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சாவகச்சேரி இராணுவ முகாமில் துப்பாக்கிச் சூடு: சிப்பாய் தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயற்சி!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில்...

Kassapa Thera
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை கடற்கரை ஆக்கிரமிப்பு: பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

திருகோணமலை டச்பே (Dutch Bay) கடற்கரைப் பகுதியில் சட்டவிரோத நிர்மாணங்களை மேற்கொண்டு புத்தர் சிலையை வைத்ததாகக்...

ed1ef740 7f31 11f0 ab3e bd52082cd0ae.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை: சட்டமா அதிபர் நீதிமன்றில் அதிரடி அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகப் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள வழக்கில், வரும்...