8f91fb36 b303c494 8f6cd2ab threewheel
இலங்கைசெய்திகள்

கட்டணங்கள் குறைக்கப்படாது!

Share

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் கோட்டாவை அரசாங்கம் இரட்டிப்பாக்கிய போதும், கட்டணக் குறைப்பு சாத்தியமில்லை என்று முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

நாளாந்தம் 5 லீற்றர் அடிப்படையில் 6 நாட்களுக்கு 30 லீற்றர் பெற்றோல் வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதும் 5 லீற்றர் பெற்றோல் மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

உராய்வு நீக்கி எண்ணெய், டயர்கள், டியூப்கள், பட்டரிகள் மற்றும் வாகன சேவைக் கட்டணங்கள் மீதான வரிகள் இன்னும் அதிகமாக இருப்பதால், சேவையைத் தொடர இந்த அதிகரிப்பு உதவாது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

480 ரூபாயாக இருந்த பெற்றோல் 3 தடவைகளில் 370 ரூபாய் வரை குறைக்கப்பட்ட போதும் தமக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படாமை காரணமாக கட்டணத்தை குறைக்க முடியவில்லை என்றும் சங்கம் தெரிவித்தது.

மேல் மாகாண முச்சக்கர வண்டிகளுக்கு நவம்பர் 1ஆம் திகதி முதலும் ஏனைய மாகாண முச்சக்கர வண்டிகளுக்கு நவம்பர் 6ஆம் திகதி முதலும் 10 லீற்றர் எரிபொருள் வழங்குவதற்காக பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என வலுச்சக்தி அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...