image f18d1ef75a
இலங்கைசெய்திகள்

பொருளாதார நெருக்கடி! – ஆதரவு வழங்குவதாக பரிஸ் கிளப் அறிவிப்பு

Share

கடன் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணும் இலங்கையின் முயற்சிகளுக்கு பரிஸ் கிளப் தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த உச்சி மாநாட்டில், பரிஸ் கிளப்பின் இணைத் தலைவர் வில்லியம் ரூஸை சந்தித்ததாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான், தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையின் கடன் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணும் முயற்சிகளுக்கு பரிஸ் கிளப்பின் முழு ஆதரவைரூஸ் உறுதியளித்தார்” என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கடனாளி நாடுகள் அனுபவிக்கும் கொடுப்பனவு சிரமங்களுக்கு ஒருங்கிணைந்த மற்றும் நிலையான தீர்வுகளை கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கும், பெரிய கடன் வழங்கும் நாடுகளின் அதிகாரிகள் குழுவே பரிஸ் கிளப் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிஸ் கிளப்பில் 22 நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளதுடன், இதில் பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகள், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜப்பான் ஆகியவை அடங்குகின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 690065dff2d56
இலங்கைசெய்திகள்

பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிப்பு உறுதி: ஆசிரியர் சங்கங்களின் எதிர்ப்பையும் மீறி கல்வி அமைச்சு அறிவிப்பு!

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பாடசாலை நேரத்தை பிற்பகல் 2 மணி வரை...

1758774194 24 664f1eee56854
செய்திகள்

இலங்கை சுற்றுலாத் துறை எழுச்சி: ஒக்டோபரில் 21.8% வளர்ச்சி! – இந்தியாவிலிருந்து அதிகப் பயணிகள் வருகை

இலங்கையின் சுற்றுலாத் துறை ஒக்டோபர் மாதத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த மாதத்தின் முதல் 26...

24 66dfd5556ba12
செய்திகள்இலங்கை

புலம்பெயர் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை: அநுர அரசு உறுதி! – அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அநுர குமார...

124787881
செய்திகள்உலகம்

கனடா பிரதமரைச் சந்திக்க மறுத்த டொனால்ட் ட்ரம்ப்: ஆசியப் பயணத்தில் புதிய சர்ச்சை

ஆசியான் உச்சி மாநாட்டிற்குப் பிறகு தனது ஆசியப் பயணத்தின் இரண்டாவது கட்டமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு...