sterling pound
இலங்கைசெய்திகள்

ஸ்டெர்லிங் பவுண்ட் பெறுமதியில் வீழ்ச்சி!

Share

அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாக்குறுதியளித்தமைக்கு அமைய, பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பாரிய வரிக் குறைப்புகளைத் தொடர்ந்து ஸ்டெர்லிங் பவுண்டின் மதிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது.

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், 1971ஆம் ஆண்டுக்குப் பின்னர் பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்ட் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய அரசாங்கத்தின் வரிக்குறைப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் பவுண்டின் மதிப்பு கடுமையாகக் குறைந்துள்ளது.

அதற்கமைய ஆசிய சந்தையில் ஒரு ஸ்டெர்லிங் பவுண்டின் விலை 1.038 டொலர்களாக காணப்பட்டதுடன், அதன் பெறுமதி 4 சதவீத்தால் சரிந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் வெள்ளிக்கிழமை சந்தை நிலவரத்துக்கு அமைய 401.58 ரூபாயாக காணப்பட்ட ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை இன்றையதினம் 376.70 ரூபாயாகக் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன், வெள்ளிக்கிழமையன்று 417.39 ரூபாயாக காணப்பட்ட விற்பனை விலையும் 391.95 ரூபா என்ற அளவுக்கு இன்றையதினம் கணிசமாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...