இலங்கை
தியாக தீபம் நினைவேந்தல் – யாழ் பல்கலையிலிருந்து ஊர்தி பவனி
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து இன்றைய தினம் ஊர்தி பவனியொன்று ஆரம்பித்தது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வளாகத்திலிருந்து இன்று காலை 11மணியளவில் குறித்த ஊர்திபவனி ஆரம்பித்தது.
இதன்போது தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பலரும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஊர்திப் பவனியானது யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணிக்கவுள்ளதுடன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தை சென்றடையவுள்ளது.
You must be logged in to post a comment Login