22 632e977ee2322
இலங்கைசெய்திகள்

2023 இல் பொதுத் தேர்தல்!

Share

2023 மார்ச் மாதத்துக்கு பிறகு எந்நேரத்தில் வேண்டுமானாலும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, அவசர பொதுத்தேர்தலொன்று நடத்தப்படலாம் என தெரியவருகின்றது.

அரசாங்க உள்ளக தகவல்களை மேற்கோள்காட்டி, சிங்கள வார இதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற திகதியில் இருந்து இரண்டரை வருடங்களுக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

உத்தேச 22 ஆவது திருத்தச்சட்டமூலத்திலும் அந்த ஏற்பாடு மாற்றப்படவில்லை.

எனவே, 2023 மார்ச் மாதத்துக்கு பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிட்டும். அந்த அதிகாரத்தை பயன்படுத்தியே ஜனாதிபதி, அவசர பொதுத்தேர்தலொன்றுக்கு செல்வாரென நம்பப்படுகின்றது.

எனினும், முன்கூட்டிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்கு மொட்டு கட்சி முன்வைத்த நிபந்தனைகளுள், நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படக்கூடாது என்பது பிரதானமானதாகும்.

ஆனால் சர்வக்கட்சி அரசாங்கம் அமைக்கு முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. அரசியல் ஸ்தீரமற்ற தன்மையும் ஏற்பட்டள்ளது. இந்நிலையிலேயே அவசர தேர்தல் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 32
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கை – கொரியா இடையே பொருளாதார ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை: கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

இலங்கை அரசாங்கத்திற்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான 2026-ஆம் ஆண்டிற்கான பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதி (EDCF)...

Untitled 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இனமலுவ ஊரக வங்கியில் துணிகர கொள்ளை: 20 பவுண் தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு

ரங்கிரி தம்புள்ளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்குச் சொந்தமான இனமலுவ ஊரக வங்கிக் கிளையில், மர்ம நபர்கள்...

Untitled 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

என்.டி.பி வங்கியில் ரூ. 13.2 பில்லியன் மோசடி: மத்திய வங்கியின் கண்காணிப்பு தோல்வி குறித்துப் பாராளுமன்றத்தில் கேள்வி

தேசிய அபிவிருத்தி வங்கியின் (NDB) குறிப்பிட்ட ஒரு பிரிவில் சுமார் 13.2 பில்லியன் ரூபாய் மதிப்பிலான...

Untitled 29
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வித்யா படுகொலை வழக்கு: ஸ்விஸ் குமார் உள்ளிட்ட நால்வரின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்யா கடந்த 2015-ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப்...