இலங்கைசெய்திகள்

விவேகானந்தர் வருகையின் 125 ஆண்டு நிறைவும் காணொளி வெளியீடும்!

Share
1
Share

சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன், இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் செயற்பாடுகள் பற்றிய ஆவணக் காணொளி வெளியீடும் எதிர்வரும் செப்ரெம்பர் 25 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் முக்கிய அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும், சிறப்பு அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் செயற்பாடுகள் பற்றிய ஆவணக் காணொளி வெளியீட்டுடன் கொழும்பு நூபுர ஷேத்ரா மாணவியரின் “கணேச வந்தனம் – மோகினியாட்டம்”, மட்டக்களப்பு சிறுவர் – சிறுமியர் இல்ல மாணவ, மாணவிகளின் “கூத்து – பாரம்பரிய நாடகம்”, வில்லுப்பாட்டு மற்றும் கொழும்பு பிஷப் கல்லூரி மாணவர்களின் “காளிங்க நர்த்தனம்” ஆகிய கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...