Tissa Vitharana
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்வக்கட்சி இல்லையெனில் பொதுத்தேர்தல்!

Share

அரசியல் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்காவிடின் பொதுத்தேர்தலை விரைவாக நடத்துமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் எதிர்வரும் வாரம் முக்கிய பேச்சுகளில் ஈடுபட எதிர்பார்த்துள்ளோம் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்தை தோற்கடிக்க பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர்பஷில் ராஜபக்சவின் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் செயற்பாட்டில் உள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் முழுமையாக வெறுக்கிறார்கள். மக்களால் கடுமையாக விமர்சிக்கப்படும் தரப்பினருக்கு எதிர்வரும் நாட்களில் முக்கிய அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன. மக்களின் ஆதரவு இல்லாமல் எப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாது.

சர்வக்கட்சி அரசாங்கத்திற்கான பேச்சுவார்த்தை முன்னேற்றகரமாக இடம்பெற்ற நிலையில் தான் 38 இராஜாங்க அமைச்சுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தற்போது பாராளுமன்றத்தின் ஊடாக தேசிய சபையை ஸ்தாபிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுன தலைமையில் அரசாங்கத்தை அமைத்துக்கொண்டு எவ்வாறு தேசிய சபை நிர்வாகத்தில் ஒன்றிணைவது என்ற சிக்கல் காணப்படுகிறது. பாராளுமன்ற நிர்வாகத்தினால் மாத்திரம் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.” – எனவும் அவர் கூறினார்.

#SriLanlaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
b08a9d50370cb3acf536546f5c0646b0 1
செய்திகள்இலங்கை

இந்தியா-இலங்கை இடையே புதிய கப்பல் பாதை: ராமேஸ்வரம் – தலைமன்னார் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே, ராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையேயான புதிய கப்பல் பாதையை ஆரம்பிப்பது குறித்து...

25 69005c8fb83eb
செய்திகள்இந்தியா

விசேட சோதனை: 2025ல் இதுவரை 2,097 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன – பொலிஸார் தகவல்

இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி...

25 69002cc98d286
செய்திகள்இலங்கை

கொழும்பு நிலப் பதிவேடு: அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த கடிதம் மாயம் – விசாரணைக்கு நீதிவான் உத்தரவு

கொழும்பு நிலப் பதிவேட்டின் அதிகாரப்பூர்வ கோப்பில் இருந்த ஒரு கடிதம் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம்...

25 68fc59844d405
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தி வழக்கில் வடக்கு மாகாணத்தில் தீவிர விசாரணை: முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட இஷாரா செவ்வந்தி நாட்டில் தலைமறைவாகவும், வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லவும் உதவிய நபர்கள்...