300181361 2207102769449781 4830722724823407415 n
இலங்கைசெய்திகள்

காங்கேசன்துறை இரவு தபால் புகையிரதம் மீண்டும் சேவையில்

Share

ஒரு வருடத்திற்கும் மேலாக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை /கொழும்பு இரவு தபால் புகையிரதம் நாளை 19.08.2022 முதல் சேவையில் தினமும் சேவையில் ஈடுபடும்.

நாளை இரவு கொழும்பில் இரவு 8மணிக்கு புறப்படும் புகையிரதம் வவுனியாவை அதிகாலை 01.39க்கு வந்தடைந்து யாழ்ப்பாணம் 04.39 , காங்கேசன்துறையை 05.19க்கு சென்றடையும்.

அதேபோல் 20.08.2022 காங்கேசன்துறையில் இருந்து 18.00க்கும், யாழ்ப்பாணதில் இருந்து 18.45க்கும் புறப்படும் இப்புகையிரதம் வவுனியாவை இரவு 21.51 க்கு வந்தடைந்து அதிகாலை 04.00க்கு கொழும்பை சென்றடையும்.

இப்புகையிரத்தில் 1ம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2ம் வகுப்பு ஒதுக்கப்பட்ட பெட்டி, 2ம் வகுப்பு சாதாரண பெட்டி, 3ம் வகுப்பு ஒதுக்கப்பட்ட பெட்டி, 3ம் வகுப்பு சாதாரண பெட்டிகள் காணப்படுவதோடு இந்தியாவில் இருந்து புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட M11 என்ஜின், ICF பெட்டிகளுடன் சேவையில் ஈடுபடும்.

கட்டண விபரங்கள்.

1ம் வகுப்பு (குளிரூட்டப்பட்டது) – 3200/-
2ம் வகுப்பு (ஒதுக்கப்பட்டது) – 2200/-
3ம் வகுப்பு (ஒதுக்கப்பட்டது) – 1800/-
(காங்கேசன்துறை/வவுனியா/கொழும்பு)

இது தவிர ஒவ்வொரு வெள்ளிகிழமைகளில் இரவு 10.00 க்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் காங்கேசன்துறை இருந்து இரவு 10.00 க்கு புறப்படும் முற்றாக குளிரூட்டப்பட்ட புகையிரதமும் சேவையில் ஈடுபடும்.

ரயில் இருக்கைகளுக்கான ஒதுக்கீடுகளை முன்பதிவு வசதியுள்ள புகையிரத நிலையங்களில் மேற்கொள்ள முடியும். இல்லாவிடின் நீங்கள் இருந்த இடத்திலேயே மேற்கொள்ளலாம். மிக எளிமையான முறையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இந்த செயலியை (Srilanka Railways Reservation App) உங்கள் கைப்பேசிகளில் நிறுவி ரயில் இருக்கை ஒதுக்கீடுகளை மேற்கொள்ளலாம்.

அது தவிர டயலொக் மூலமாக 444, மொபிடெல் மூலமாக 365 க்கு அழைத்தும் , இணையத்தில் https://seatreservation.railway.gov.lk மூலமாக சென்றும் ஒதுக்கீடுகளை மேற்கொள்ள முடியும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...