இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சாதாரண தர மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு

Share
20220814 080525 scaled
Share

கல்வி பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

வடமாகாணத்திலுள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் சட்டத்தரணி வேலாயுதம் தேவசேனாதிபதியின் கொழும்பு அருள் கல்வி வட்டத்தின் அனுசரணையுடன் இந்த கருத்தரங்கு முன்னெடுக்கப்பட்டது.

இந்த கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்களுக்கு கடந்த கால சாதாரண தர வினாத்தாள்கள் விடைகள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டதுடன் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கருத்தரங்கு தொடர்ச்சியாக வடமாகாணத்தில் இடம்பெற்று வருகின்ற நிலையில் நாளை திங்கட்கிழமை (15) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்திலும் செவ்வாய்க்கிழமை மாங்குளத்தில் அமைந்துள்ள மாகாண தொழில்நுட்பக் கல்லூரியிலும் புதன்கிழமை(17) முல்லைத்தீவு ஊற்றங்கரை விநாயகர் ஆலய மண்டபத்திலும் வியாழக்கிழமை(18) மன்னார் நகர சபை மண்டபத்திலும் வெள்ளிக்கிழமை(19) வவுனியா நகரசபை மண்டபத்திலும் இடம்பெறவுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...