gotta
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடு திரும்ப மறுக்கும் கோட்டா! – சிங்கப்பூர் விசா மேலும் நீடிப்பு

Share

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் இரண்டு வாரங்கள் சிங்கப்பூரில் தங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை மாதம் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவிவிலகக் கோரி நாட்டில் மாபெரும் மக்கள் போராட்டம் வெடித்தது.

இந்தநிலையில், ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறி நாட்டில் தலைமறைவாகவிருந்த கோட்டாபய ராஜபக்ச கடந்த 13 ஆம் திகதி மாலைதீவுக்கு தப்பிச் சென்றார்.

மாலைதீவு சென்ற அவருக்கு அங்கும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.

சாதாரண நபருக்கு வழங்கப்பட்டுள்ள 14 நாட்களுக்கான விசாவே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவருக்கு சலுகைகள் எவையும் வழங்கப்படவில்லை எனவும் சிங்கப்பூர் அரசு தெரிவித்தது.

இதன்படி கடந்த 28ஆம் திகதி குறித்த விசா முடிவடையும் நிலையில், அவருக்கு மீண்டும் 14 நாட்கள் தங்கியிருப்பதற்கான விசா சிங்கப்பூர் அரசால் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்வரும் 13ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் சிங்கப்பூரில் தங்குவதற்கு மேலும் 14 நாட்கள் விசாவை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கோரிக்கை இலங்கை அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது எனவும், இந்த கோரிக்கைக்கு இணங்க அவருக்கு விசா நீடிக்கப்படவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டபாய ராஜபக்ச இலங்கை திரும்புவதற்கு சரியான தருணம் இதுவல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...