image 9f399caa60
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி – ஐமச சந்திப்பு வெள்ளியன்று!

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாரான திஸ்ஸ அத்தநாயக்க, இன்று மாலை இந்த தகவலை வெளியிட்டார்.

அரசமைப்பு, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக சர்வக்கட்சி வேலைத்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறுகோரி எதிர்க்கட்சித் தலைவருக்கு, ஜனாதிபதி கடிதம் அனுப்பியிருந்தார்.

அது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று, எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் கொழும்பில் இன்று நடைபெற்றது.

சர்வக்கட்சி வேலைத்திட்டம் சம்பந்தமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

” நாட்டில் தற்போதைய நிலைவரம், கைது வேட்டை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.” – என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் அறிவித்தார்.

சர்வக்கட்சி அரசு மற்றும் சர்வக்கட்சி வேலைத்திட்டம் என்பன இரு வேறு திட்டங்களாகும். சர்வக்கட்சி அரசியல் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில்தான் சர்வக்கட்சி வேலைத்திட்டம் சம்பந்தமாக கலந்துரையாட செல்கின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...