767676
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழில் எரிபொருள் வரிசையில் நிற்கும் மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாக திருட்டுக்கள் அதிகரிப்பு!

Share

யாழில் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வரிசைகளில் விடப்படும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து அதன் உதிரி பாகங்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வரிசையில் விடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றின் முன் பகுதியின் பாகம் களவாடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வரிசையில் விடப்பட்ட “ஜப்பான் 200” ரக மோட்டார் சைக்கிளின் ஒரு பக்கம் பாகம் களவாடப்பட்டு இருந்தது. அதன் பெறுமதி 12 ஆயிரத்திற்கும் அதிகம் என உரிமையாளர் தெரிவித்து இருந்தார்.

இவ்வாறாக வரிசைகளில் இரவு வேளைகளில் விடப்படும் மோட்டார் சைக்கிள்களின் , பக்க கண்ணாடிகள் , சிக்கனல்கள் , கோர்ன் உள்ளிட்ட உதிரிபாகங்கள் களவாடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...