இலங்கை
முல்லைத்தீவு வாள்வெட்டு! – ஒருவர் பலி
முல்லைத்தீவு முள்ளியவளை தெற்கு பகுதியில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் வாள்வெட்டாக மாறியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்(26) இரவு இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டிற்கு இலக்கான முள்ளியவளை தெற்கினைச் சேர்ந்த குடும்பஸ்தரான 32 அகவையுடைய பெருமாள் சதீஸ்வரன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நடைபெற்ற போது முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு கிராமத்தவர்கள் தெரியப்படுத்தியும் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகைதரவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
சடலம் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - tamilnaadi.com