Parliament SL 2 1 1000x600 1
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய அமைச்சரவையில் 25 அமைச்சர்கள்!!

Share

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் 20 முதல் 25 வரையான அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களும், தொழில்சார் நிபுணர்களுக்கும் அமைச்சரவையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

பிரதமர் பதவிக்கு தினேஷ் குணவர்தனவின் பெயரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பரிந்துரைத்துள்ளது.

எனினும், அனைத்து கட்சிகளின் பங்களிப்புடன் சர்வக்கட்சி அரசொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி முயற்சித்துவருவதால் பிரதமர் பதவி குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
சம்பிக்க ரணவக்கவின் பெயரும் பரிந்துரையில் உள்ளது.

அத்துடன், பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பிரதமர் பதவியை வழங்கினால், போராட்டக்காரர்களை ஓரளவுக் கட்டுப்படுத்த முடியும் என்ற யோசனையும் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் ஈபிடிபி, இ.தொ.கா. என்பவற்றுக்கு அமைச்சு பதவிகள் உறுதியாகியுள்ளன. ஜனாதிபதி இன்று பதவியேற்ற பிறகு, அடுத்தக்கட்ட நகர்வுகள் தீவிரமாக இடம்பெறும்.

அதேவேளை, ஆளுநர் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ள அதேவேளை, வெளிவிவகாரத்துறை மற்றும் பாதுகாப்பு துறையிலும் சில மறுசீரமைப்புகள் செய்யப்படவுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
உலகம்செய்திகள்

126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’ விற்பனைக்கு வருகிறது: பல மில்லியன் பவுண்டுகள் விலை!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான 126 ஆண்டுகள் பழமையான ‘பிரைட்டன் பேலஸ் பியர்’...

b7e08360 48da 11f0 beef ebd92399e8ec.jpg
உலகம்செய்திகள்

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்: மேற்குக் கரையில் இளைஞர் சுட்டுக்கொலை; காசாவிலும் பதற்றம்!

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பகுதிகளில் இஸ்ரேலியப் படையினர் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால்...

1.1
செய்திகள்அரசியல்இலங்கை

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் ஆரம்பம் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி!

பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆண்டின் ஆரம்பத்திலேயே விசாரிப்பதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...

l9920250710093646
செய்திகள்உலகம்

மெக்சிக்கோவில் சக்திவாய்ந்த நிலஅதிர்வு: 6.5 ரிக்டர் அளவில் பதிவு!

மெக்சிக்கோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெரேரோ (Guerrero) மாநிலத்தில் இன்று சக்திவாய்ந்த நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது....