ranil wickremesinghe 759fff
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை கட்டியெழுப்ப ஒரு வருடமே போதும்!! – கூறுகிறார் ரணில்

Share

” இலங்கையை கட்டியெழுப்ப முடியும். அதற்கு பல வருடங்கள் தேவையில்லை. அடுத்த வருடம் சிறந்த நிலையில் இருப்போம். ”

இவ்வாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்தே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

நாட்டை மீட்டெடுப்பதற்காக அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஒன்றிணைந்து பயணிப்போம். அதற்காகவே சர்வக்கட்சி அரசை ஸ்தாபிக்க பாடுபடுகின்றேன்.

19 ஆவது திருத்தச்சட்டம் மீள அமுல்படுத்தப்படும். அதன் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை பற்றி கலந்துரையாடலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை இழுத்தடிக்க முடியாது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். விசாரணை அறிக்கைகள் உள்ளன. அவை மீளாய்வுக்குட்படுத்தப்படும் . இங்கிலாந்து பொலிஸாரின் உதவி பெறப்படும்.

பாசிசவாதத்துக்கு இடமில்லை. சட்டம், ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை.

முறைமை மாற்றம் பற்றி அமைதியாக போராடும், போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர். அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.

எனவும் பதில் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 3
செய்திகள்இந்தியா

விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு: நடிகர் விஜய்யின் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் மனைவி சங்கீதா சொர்ணலிங்கம், தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் உள்ள...

10 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பகுதி சந்திர கிரகணத்தைக் காணும் அரிய வாய்ப்பு!

இலங்கையர்கள் மார்ச் 3, 2026 செவ்வாய்க்கிழமை சந்திர கிரகணத்தைக் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று ஆர்தர்...

09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர்...

08 3
செய்திகள்இலங்கை

குற்றவாளிகளைத் தேடி: சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட கடத்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை...