United Nations
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்க வழிவகுக்குக! – ஐ.நா கோரிக்கை

Share

இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு,

போராட்டங்களை நிதானமாக பொலிஸார் கையாள வேண்டும். வன்முறையைத் தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

அதேநேரம், போராட்டங்களை ஏற்பாடு செய்தவர்களும், ஆதரவாளர்களும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். அத்தியாவசிய மருத்துவ அல்லது மனிதாபிமான சேவைகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டங்களை கண்காணிக்கவும் அறிக்கையிடவும் உரிமை உண்டு. எனவே இவற்றை செயல்படுத்துவதில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது என்று பாதுகாப்புப் படையினருக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

பொலிஸார் மற்றும் இராணுவப்படைகள் எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் அங்கீகரிக்கும் அதே வேளையில், தங்களைத் தாங்களே தாக்கிக்கொள்ளும் நிகழ்வுகள் உள்ளிட்ட பொதுமக்களைக் கையாள்வதில் வன்முறையைத் தவிர்க்கவும், மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்படவும் அரசாங்கம் காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

பொது விதியாக, பொலிஸாரை பயன்படுத்தவேண்டிய சந்தர்ப்பங்களில் ராணுவத்தை பயன்படுத்தக் கூடாது. விதிவிலக்கான சூழ்நிலைகளில், இராணுவம் சட்ட அமலாக்க செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது, அவர்கள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரங்களுக்கு கட்டுப்பட்டு, சிவில் அதிகாரிகளுக்கு முழுமையாக கீழ்ப்படிந்து சிவில் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூற வேண்டும்.

இலங்கை மக்கள் ஏற்கனவே பாரிய துன்பங்களை அனுபவித்து வருவதுடன், உணவு, சுகாதாரம் மற்றும் கல்விக்கான உரிமைகள் உள்ளிட்ட தமது அடிப்படைத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்ற நிச்சயமற்ற நிலையில் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிறந்த வாழ்க்கை, பொருளாதார மற்றும் சமூக நெநெருக்கடிகளை தீர்க்க அமைதியான முறையில் போராட்டம் நடத்த அவர்களுக்கு உரிமை உண்டு.அதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

#SriLankanews

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...