United Nations
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனநாயக ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்க வழிவகுக்குக! – ஐ.நா கோரிக்கை

Share

இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு,

போராட்டங்களை நிதானமாக பொலிஸார் கையாள வேண்டும். வன்முறையைத் தடுக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

அதேநேரம், போராட்டங்களை ஏற்பாடு செய்தவர்களும், ஆதரவாளர்களும் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட வேண்டும். அத்தியாவசிய மருத்துவ அல்லது மனிதாபிமான சேவைகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டங்களை கண்காணிக்கவும் அறிக்கையிடவும் உரிமை உண்டு. எனவே இவற்றை செயல்படுத்துவதில் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுடன், எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது என்று பாதுகாப்புப் படையினருக்கு தெளிவான அறிவுறுத்தல்களை வழங்குமாறு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

பொலிஸார் மற்றும் இராணுவப்படைகள் எதிர்கொள்ளும் சவால்களை நாங்கள் அங்கீகரிக்கும் அதே வேளையில், தங்களைத் தாங்களே தாக்கிக்கொள்ளும் நிகழ்வுகள் உள்ளிட்ட பொதுமக்களைக் கையாள்வதில் வன்முறையைத் தவிர்க்கவும், மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயல்படவும் அரசாங்கம் காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

பொது விதியாக, பொலிஸாரை பயன்படுத்தவேண்டிய சந்தர்ப்பங்களில் ராணுவத்தை பயன்படுத்தக் கூடாது. விதிவிலக்கான சூழ்நிலைகளில், இராணுவம் சட்ட அமலாக்க செயல்பாடுகளை மேற்கொள்ளும் போது, அவர்கள் சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரங்களுக்கு கட்டுப்பட்டு, சிவில் அதிகாரிகளுக்கு முழுமையாக கீழ்ப்படிந்து சிவில் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூற வேண்டும்.

இலங்கை மக்கள் ஏற்கனவே பாரிய துன்பங்களை அனுபவித்து வருவதுடன், உணவு, சுகாதாரம் மற்றும் கல்விக்கான உரிமைகள் உள்ளிட்ட தமது அடிப்படைத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்ற நிச்சயமற்ற நிலையில் தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். ஒரு சிறந்த வாழ்க்கை, பொருளாதார மற்றும் சமூக நெநெருக்கடிகளை தீர்க்க அமைதியான முறையில் போராட்டம் நடத்த அவர்களுக்கு உரிமை உண்டு.அதற்கு இடமளிக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

#SriLankanews

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...