download 1 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் 22 ஆவது திருத்தம் இல்லை!

Share

மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் அமையவில்லை – என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

சட்டத்தரணிகள் சங்கத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டில் ‘சிஸ்டம் சேஜ்’சையே மக்கள் கோருகின்றனர். அதற்கான ஏற்பாடு அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் இல்லை என்பதே சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவின் கருத்தாக இருக்கின்றது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, அரசியல் மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்த வேண்டுமெனில் 22 ஆவது திருத்தச்சட்டமூலம், திருத்தியமைக்கப்பட வேண்டும் எனவும் சாலிய பீரிஸ் வலியுறுத்தினார்.

அதேவேளை, அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என பிரதான எதிர்க்கட்சிகளும் அறிவித்துள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1759803512
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

போதைக்கு அடிமையான யாழ்ப்பாண யுவதி தற்கொலை முயற்சி; சிகிச்சை பலனளிக்காமல் மரணம்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியைச் சேர்ந்த கலியுகவரதன் சுருதி (வயது 20) என்ற...

image cb0f8da672
இலங்கைசெய்திகள்

நாமல் ராஜபக்ஷ தென் கொரியாவில் துணை சபாநாயகரைச் சந்திப்பு: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல்!

தென் கொரியாவுக்குத் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...

1 32 1
செய்திகள்உலகம்

ஹொங்கொங் விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்து: இரு விமான நிலையப் பணியாளர்கள் பலி!

ஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (அக் 20) தரையிறங்கும் போது, ஒரு சரக்கு...

images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...