20220625 130651 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு நீதி அமைச்சரால் சான்றிதழ்!

Share

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரண்டாம் மொழி சிங்கள கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

யாழ்ப்பாணம் இந்து பௌத்த கலாசார பேரவையில் இடம்பெற்ற நிகழ்வில் குறித்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய விஜயதாச ராஜபக்ச இரண்டாம் மொழி கல்வியின் அவசியம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தெரிந்திருப்பது அவசியம் மற்றும் இனங்களுக்கு இடையில் பரஸ்பர நல்லுறவை ஏற்படுத்துவதற்காக மொழிகள் அவசியமாகின்றன ஆகிய கருத்துகளை முன்வைத்தார்.

குறித்த இரண்டாம் மொழி கற்கை நெறி நிலையத்தின் இயக்குனர் இராமச்சந்திரன் உரையாற்றும்போது தற்போது நாட்டில் உள்ள நேர்மையான புத்திஜீவிகளில் ஒருவர் விஜயதாச ராஜபக்ச எனவும் அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு தற்போது நாட்டில் இருக்கும் பொருத்தமானவர் இவர்தான் எனவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், 52 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மற்றும் உதவி அரசாங்க அதிபர் அதிகாரிகள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
1748968110 WhatsApp Image 2025 06 03 at 8.24.23 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

நம்பகமான கல்விப் பங்காளியாகத் தொடர்வோம்: அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள் பிரதமரிடம் உறுதி!

இலங்கையின் நம்பகமான கல்விப் பங்காளி என்ற வகையில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக அவுஸ்திரேலியப் பிரதிநிதிகள், கல்வி...

image 28f29109e8
அரசியல்இலங்கைசெய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு மின்சாரம், நீர் கட்டணத்தில் 50% தள்ளுபடி: ஜனாதிபதிக்கு ரவூப் ஹக்கீம் வேண்டுகோள்!

நவம்பர் மாதக் கடைசியில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட...

15786408 national 02
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெலிவேரிய விடுதியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: ஐஸ் போதைப் பொருள் கொடுத்து 21 வயதுப் பெண்ணுக்குத் துன்புறுத்தல்!

வெலிவேரிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கட்டாயப்படுத்தி ஐஸ் போதைப் பொருள் (Ice...