IMG 20220624 WA0060
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வடமராட்சி பேருந்து சேவை சங்கத்தின் போராட்டம் நிறைவு!

Share

வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் சற்றுமுன்னர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று காலை ஆறு மணியிலிருந்து சேவையில் ஈடுபடாமல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கத்தினர் போராட்டம் வட பிராந்திய முகாமையாளர் உறுதி மொழியின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கும் இலங்கை போக்குவரத்து சாலைகளில் டீசல் நிரப்பும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் பருத்தித்துறை சாலை முகாமையாளரின் தன்னிச்சையான நடவடிக்கைகளை கண்டித்து இன்றைய தினம் தனியார் பேருந்து சேவை சங்கத்தினரால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆ.சிறி, பருத்தித்துறை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி, வடமராட்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், ஆகியோர் வடபிராந்திய பிராந்திய சாலை முகாமையாளரை அழைத்து அவருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் 750 வழித்தடத்தில் நாளாந்தம் சேவையில் ஈடுபடும் 25 போக்குவரத்து வாகனங்களுக்கும், நாளாந்தம் 750 லீட்டர் டீசல் வழங்குவதாக உறுதி மொழி அளிக்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், தற்போது தனியார் 750 வழித்தட சேவை போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பியது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...