Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி செயலக நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டம்! – ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைது

Share

ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்டதையடுத்து பதற்ற நிலை உருவானது. எனினும், சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோட்டாகோ கமவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 73 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

பிரதான நுழைவாயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அதிகாலை முதல் லோட்டஸ் மார்க்கத்தின் இரு பிரதான நுழைவாயில்களையும் மறித்து, கூடாரங்கள் அமைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்து கூடாரங்களை அகற்ற முற்பட்டனர். இதனால் பதற்ற நிலை உருவானது. போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...