Gotabaya Rajapaksa
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி செயலக நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டம்! – ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரால் கைது

Share

ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்டதையடுத்து பதற்ற நிலை உருவானது. எனினும், சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கோட்டாகோ கமவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் இன்று 73 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

பிரதான நுழைவாயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அதிகாலை முதல் லோட்டஸ் மார்க்கத்தின் இரு பிரதான நுழைவாயில்களையும் மறித்து, கூடாரங்கள் அமைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பொலிஸார் அவ்விடத்துக்கு விரைந்து கூடாரங்களை அகற்ற முற்பட்டனர். இதனால் பதற்ற நிலை உருவானது. போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...