world bank 20220162151
இலங்கைசெய்திகள்

இலங்கை பொருளாதாரம் 7.8 வீதத்தினால் வீழ்ச்சி! – உலக வங்கி எச்சரிக்கை

Share

மின்சாரம், உணவு, எரிபொருள் தட்டுப்பாடுகளுடன் கடுமையாக போராடிக்கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரம் , இவ் வருடம் 7.8 வீதத்தினால் வீழ்ச்சியடையுமென உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொருளாதாரத்தை மோசமாக கையாண்டதன் காரணமாக இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாதாவாறு அந்நியசெலாவணி முற்றாக முடிவடைந்துள்ளதால் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக – 2024ஆம் ஆண்டளவிலேயே இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சாதகமான நிலையை நோக்கி முன்னேறுமென உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

2023 இல் இலங்கையின் பொருளாதாரம் 3.7வீதத்தினால் வீழ்ச்சியடையுமென உலக வங்கி கணித்துள்ளது.

வெளிநாட்டுக் கடன்கொடுப்பனவு நிறுத்தப்பட்டமை உட்பட பல காரணங்களால் இலங்கையின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறிப்பிடத்தக்க அளவு வீழ்ச்சியடைந்துள்ளன. இலங்கையின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகளவு நிச்சயமற்றவையாகவும், குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஆபத்தை கொண்டவையாகவும் காணப்படுகின்றதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடிகளையும் அதிகரித்துவரும் அரசியல் நிலையற்ற தன்மையையும் எதிர்கொண்டுள்ளது, மின்துண்டிப்பு தொடர்கின்றது உணவு போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் நுண் பொருளாதார ஸ்திரதன்மையை மீளமைத்தல் ஆகிய நடவடிக்கைகளை அதிகாரிகள் தாமதப்படுத்தினால் பொருளாதார வீழ்ச்சி மேலும் மோசமடையலாமெனவும் உலக வங்கி எச்சரித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...