law
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு!

Share

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூறவேண்டியவர்கள் என பட்டியலிட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உப்பட 13 பேருக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இலங்கை நிறுவனம்’ மற்றும் மேலும் மூவர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச,முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், முன்னாள் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட 13 பேர் இந்த மனுவில் எதிர் மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கையில் நெருக்கடி ஏற்படும் வகையில் பகிரங்க தன்மை இன்றியும் பொறுப்புக்கூறலை தவிர்த்து உயர்மட்ட முடிவுகளை எடுத்ததற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு காரணமான சில விடயங்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(1) 2019 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக வரிச்சலுகை வழங்கியதன் மூலம் அரசு வருமானத்தை குறைத்தது.

(2) அந்த வரிச் சலுகையை மீண்டும் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காதது.

3) சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு பெறுவதை தாமதப்படுத்தியது.

(4) ரூபாவின் மதிப்பு தொடர்பாக உரிய நேரத்தில் தீர்மானம் எடுக்காதது.

மேற்படி விடயங்கள் குறித்து சம்மந்தப்பட்ட எதிர் மனுதாரர்கள் நேரடியாக பொறுப்புக்கூற வேண்டும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 690416ca1b001
செய்திகள்இலங்கை

வானிலை அறிக்கை: சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று (அக்31) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...

25 6903a9422debc
செய்திகள்உலகம்

சீனா மீதான வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு – இரு நாட்டு உறவுகள் குறித்து ஜி ஜின்பிங் உறுதி

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற...

images
செய்திகள்இலங்கை

2024 மக்கள் தொகை கணக்கெடுப்பு: மொனராகலை மாவட்டத்தில் அதிகபட்ச எழுத்தறிவு

மக்கள் தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2024 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மாவட்டங்களுக்கிடையேயான...

25 6902b801c3b01
செய்திகள்இலங்கை

ஓடுதளம் தேவையில்லாத, AI-இயங்கும் உலகின் முதல் போர் விமானத்தை உருவாக்கியது அமெரிக்கா!

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஒரு தனியார் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய உலகின்...