Selvarasa Gajendran 1
அரசியல்இலங்கைசெய்திகள்

தமிழருக்கு எதிரான அடக்குமுறை தொடர்கின்றது! – கஜேந்திரன் சுட்டிக்காட்டு

Share

இலங்கை அழிவைச் சந்தித்தாலும் பட்டினியால் மக்கள் இறக்கும் நிலை வந்தாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தப் போவதில்லை எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் சபையில் இன்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“மூன்று வேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் நாட்டு மக்கள் தவிக்கின்றார்கள். நாடு பற்றி எரிகின்றது ஆனால், வடக்கில் சிங்கள பௌத்த மயமாக்கல் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது.

குறிப்பாக முல்லைத்தீவில் கடற்படை முகாம் ஒன்றை அமைக்க கடற்படை கட்டுப்பாட்டில் உள்ள 600 ஏக்கர் காணி அளவீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தபோது பாதுகாப்புப் படையினரால் அவர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதன்போது சுயாதீன ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் கடற்படையினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளார்” – என்றார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதன்போது கஜேந்திரன் எம்.பி. வலியுறுத்தினார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...