அரசியல்

சர்வகட்சி அரசுக்கு சு.க. முழு ஆதரவு! – மைத்திரி தெரிவிப்பு

Published

on

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அரசை உருவாக்குவதற்காக முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளினதும், நாணய அமைப்புகளினதும் உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாம் சர்வதேச நாடுகளின் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பேச்சுகளை மேற்கொண்டபோது, நாட்டில் சர்வகட்சியொன்றை உருவாக்கினால் மாத்திரமே தாங்கள் உதவிகளை வழங்குவதாக சர்வதேச நாடுகள் தெரிவித்தன.

எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது நாட்டில் சர்வகட்சி அரசொன்றை உருவாக்குவதற்காக முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வழங்குகின்றது” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version