ranil mp 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அலரி மாளிகை செல்லமாட்டேன்! – பிரதமர் ரணில் தீர்மானம்

Share

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்கு வசிப்பதற்காக செல்லப்போவதில்லை என்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளார்.

அவர் தமது தனிப்பட்ட இல்லத்தில் வசிப்பதுடன் அலரி மாளிகைக்கு செல்லாமல் கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்தே உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் அலுவலகத்தின் செலவை நூற்றுக்கு 50 வீதமாக குறைப்பதற்கு தீர்மானித்து அதுதொடர்பான பணிப்புரைகளையும் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில் செலவை குறைப்பது தமக்கும் பொருந்தும் என்பதை வெளிப்படுத்துவதற்காக அவர் அலரி மாளிகைக்குச் செல்லாமல் ப்ளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்திலிருந்து கடமைகளை செய்வதற்கு தீர்மானித்துள்ளார்.

அதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் குடியிருப்பதற்காக செல்லவில்லை என்றும் தேவையான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்காக மட்டுமே அலரி மாளிகையை உபயோகப் படுத்தியதாகவும் பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...