அரசியல்இலங்கைசெய்திகள்

ஹரீன், மனுஷவின் செயல் அருவருக்கத்தக்கது! – சஜித் சீற்றம்

sajith 5
Share

“எமது கட்சியின் தீர்மானத்தை மீறி அரசு பக்கம் சாய்ந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்ட ஹரீன் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவர்களின் இந்தச் செயற்பாடு மிகவும் அருவருக்கத்தக்கது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் நல்ல கருமங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிரணியில் இருந்துகொண்டு ஆதரவு வழங்கும் எனவும், அமைச்சுப் பதவிகளை ஏற்பதில்லை எனவும் நாம் ஏற்கனவே முடிவெடுத்திருந்தோம். இந்நிலையில், ஹரீன் பெர்னாண்டோவும், மனுஷ நாணயக்காரவும் எமது கட்சியின் முடிவை மீறிச் செயற்பட்டுள்ளதால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

எமது கட்சியிலிருந்து உறுப்பினர்களை அரசு பக்கம் எடுத்தால் எமது ஆதரவை வாபஸ் பெறுவோம் எனவும் நாம் ஏற்கனவே தீர்மானித்திருந்தோம். இந்நிலையில், ஹரீனுக்கும், மனுஷவுக்கும் அமைச்சுப் பதவிகளை அரசு வழங்கியுள்ளதால் அரசுக்கான எமது ஆதரவு தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கூடி பரிசீலிக்கும்” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...