Dullas Alahapperuma
அரசியல்இலங்கைசெய்திகள்

அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம்! – டலஸ் வலியுறுத்து

Share

நடந்து முடிந்த சம்பவங்கள் ஒரு முன்னோட்டம் மட்டுமே. எமது செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படாவிட்டால் அது முழு திரைப்படமாக அரங்கேறுவதை தவிர்க்க முடியாது என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த அழிவுகளோடு நாம் ஒன்றிணையாவிட்டால் மோசமான நிலையை சந்திக்க நேரும். நாட்டின் எதிர்காலம் தொடர்பில் கவனம் செலுத்தி எமது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

தீர்மானம் எமது கையிலே உள்ளது நாடாளுமன்றத்தில் 225 பேரும் இதனைப் புரிந்து கொண்டு செயற்படுவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

83 ல் நடைபெற்ற அழிவிற்குப் பின்னர் மிக மோசமான அழிவு இதுவாகும். அந்த நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் என்பதை நாம் உணர வேண்டும்.

நாடாளுமன்றத்திலும் வெளியிலும் எமது செயற்பாடுகள் இந்த ஆர்ப்பாட்டங்களின் பொதுவான அடிப்படையாக உள்ளது.

பிள்ளைகள் இல்லாத நாடு போன்று நாம் செயற்பட்டு வருகின்றோம். சொத்துக்கள் போனால் அதனை பெற்றுக் கொள்ளலாம்.ஆனால் எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடக்கூடாது. எமது செயற்பாடுகள் அவர்களின் எதிர்காலத்தை பாதித்து விடக்கூடாது.

எமது பிள்ளைகள் 6 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதவுள்ளனர் அவர்கள் சுதந்திரமாக அதனை மேற்கொள்ள சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுப்பதே எமது கடமையாகும்.

ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்றில்லாமல் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. அந்த பொறுப்பை நாட்டில் உள்ள அனைவரும் எதிர்பார்த்து காத்துள்ளனர். மக்கள் மாற்று ஏற்பாடுகளுக்கு செல்ல முடியும்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 13
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகப் பொது எதிரணி: ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இணைவு – நுகேகொடையில் பேரணி!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் (SJB) ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பொது...

MediaFile 3 3
செய்திகள்உலகம்

லெபனானில் எல்லையைக் கடக்கும் இஸ்ரேலியச் சுவர்: UNIFIL ஆய்வு உறுதி – சுவரை அகற்றக் கோரி ஐ.நா. வலியுறுத்தல்!

லெபனானில் உள்ள நீலக் கோட்டைக் கடந்து இஸ்ரேலிய இராணுவத்தால் கட்டப்பட்ட ஒரு சுவர், டி ஃபேக்டோ...

MediaFile 2 4
இந்தியாசெய்திகள்

டெல்லி தாக்குதல்: கைப்பற்றப்பட்ட 3,000 கிலோ வெடிபொருள் பொலிஸ் நிலையத்தில் வெடிப்பு – தடயவியல் குழு உட்பட 7 பேர் பலி!

தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடத்தப்பட்ட கார் குண்டுத் தாக்குதல்...

images 12 1
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் 2026 வரவு செலவுத் திட்டம்: 17 நாட்களுக்குக் குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் (Budget) குழு...