ezgif 5 703ecfc485
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்: மஹிந்தவின் சகாக்கள் இருவர் கைது!

Share

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சகாக்களான மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொறட்டுவை நகர சபை ஊழியர் ஒருவர் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் ‘கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவர் மாத்திரமே கைதுசெய்யப்பட்டிருந்தார் என்று முன்னராகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவும், மொரட்டுவை நகர சபை ஊழியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 78 பேரை அடையாளம் காண்பதற்காகப் பொலிஸார் தற்போது பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

அவர்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...