ezgif 5 703ecfc485
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்: மஹிந்தவின் சகாக்கள் இருவர் கைது!

Share

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சகாக்களான மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொறட்டுவை நகர சபை ஊழியர் ஒருவர் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு அருகில் ‘கோட்டா கோ கம’ மற்றும் ‘மைனா கோ கம’ போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள போதிலும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் ஒருவர் மாத்திரமே கைதுசெய்யப்பட்டிருந்தார் என்று முன்னராகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அமல் சில்வாவும், மொரட்டுவை நகர சபை ஊழியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 78 பேரை அடையாளம் காண்பதற்காகப் பொலிஸார் தற்போது பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

அவர்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68fc8c23901e1
செய்திகள்இலங்கை

கரூர் சோகச் சம்பவம்: உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரை நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் விஜய் சந்திக்கிறார்!

கரூர் சம்பவம் இந்தியாவில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில்,நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை...

Ilankumaran
செய்திகள்இலங்கை

யாழில் மீற்றர் வட்டி மாஃபியாவுக்கு எதிராக மக்கள் தகவல் தரலாம்: நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கோரிக்கை!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மாஃபியாவுக்கு எதிராக மக்கள் தமக்குத் தகவல்களை வழங்கலாம் எனத்...

25 68fc8352b9138
செய்திகள்இலங்கை

நவம்பர் 5 அன்று நாடு தழுவிய சுனாமி தயார்நிலைப் பயிற்சி: அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவிப்பு!

நாடு முழுவதினையும் உள்ளடக்கி நவம்பர் 5 ஆம் திகதி சுனாமி தயார்நிலைப் பயிற்சியை நடத்த ஏற்பாடுகள்...

image 2c8a8047e8
செய்திகள்இலங்கை

திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு – தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை!

திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரித்துள்ளது என்று இலங்கை தனியார் பேருந்து...