நாடாளுமன்றம்
அரசியல்இலங்கைசெய்திகள்

புதிய பிரதமர் நியமனத்தின் பின் இன்று கூடும் முதலாவது நாடாளுமன்றம்

Share

புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது புதிய பிரதி சபாநாயகருக்கான தெரிவு இடம்பெறவுள்ளது.

இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி, பிரதி சபாநாயகர் பதவிக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரைப் பரிந்துரைக்கவுள்ளது.

அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அஜித் ராஜபக்சவின் பெயரை முன்வைக்கத் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, பிரதி சபாநாயகர் தெரிவின்போது ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மத்தியக் குழு கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது என அதன் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தமது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று நாடாளுமன்ற அமர்வு ஆரம்பாகும் சந்தர்ப்பத்தில் உறுப்பினர்களுக்கான ஆசனத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படும்.

இதற்கமைய, இதுவரையில் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆளும் தரப்பின் பக்கம் ஆசனம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றச் செயற்பாடுகள் தொடர்பான குழுவின் விசேட கூட்டம் இன்று முற்பகல் 8.30 அளவில் இடம்பெறவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...