d007daa15e3caa7f952776d97baf7d35 XL
அரசியல்இலங்கைசெய்திகள்

பொலிஸ்மா அதிபர் உடன் பதவி விலக வேண்டும்! – பெரமுனவினர் வலியுறுத்து

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க தவறிய பொலிஸ்மா அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அத்துடன், பொலிஸ்மா அதிபர்மீது சரமாரியாக விமர்சனக் கணைகளையும் தொடுத்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பிக்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்று (14) நடைபெற்றது.

சுமார் 91 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். மஹிந்த ராஜபக்ச இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ச கடந்த 10 ஆம் திகதி முதல் இன்றுவரை, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தலைமறைவாகவே வாழ்கின்றார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் நாட்டில் கடந்த 9 ஆம் திகதி ஏற்பட்ட வன்முறை, அதனால் ஏற்பட்ட தாக்கங்கள், புதிய அரசு, நாடாளுமன்ற அமர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்போது மக்கள் பிரதிநிதிகளை பாதுகாக்க, பொலிஸ்மா தவறிவிட்டார், முன்கூட்டியே பாதுகாப்பு பொறிமுறையை வகுக்க தவறிவிட்டார், என அவருக்கு எதிராக சரமாரியாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 11
செய்திகள்உலகம்

ஈரானிய போர்க்கப்பல் மீதான தாக்குதல்: “தகுந்த பதில் வழங்கப்படும்” – ஈரான் இராணுவத் தளபதி எச்சரிக்கை!

இந்தியப் பெருங்கடலில் வைத்து ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான நவீன போர்க்கப்பலான ‘ஐரிஸ் டேனா’ (IRIS Dena)...

18 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை ‘யகா’ பாலத்தின் சீரமைப்புப் பணிகள் தாமதம்: பயணிகள் கடும் அவதி!

பேராதனை பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ‘யகா’ பாலத்தின் (Yaka Palama) சீரமைப்புப் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள்...

17 13
செய்திகள்இலங்கை

நடிகர் விஜய் தனது விருப்பமான நடிகர்: இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026-ல் நாமல் ராஜபக்ஷ கருத்து

புதுடெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா டுடே கொன்க்ளேவ் 2026’ (India Today Conclave 2026) நிகழ்வில் கலந்துகொண்டு...

16 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு தழுவிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை: ஒரே நாளில் 968 சந்தேகநபர்கள் கைது!

இலங்கை முழுவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் முன்னெடுக்கப்பட்டு வரும் தீவிர நடவடிக்கைகளின்...