மே 9 வன்முறைச் சம்பவங்கள்
அரசியல்இலங்கைசெய்திகள்

‘மே 9’ வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 230 பேர் கைது!

Share

கடந்த 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 230 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

காலிமுகத்திடல் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இதன்படி 170 பேரிடம் இதுவரையில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியாக வீடுகளை சேதப்படுத்தியமை, தீ வைத்தமை, வாகனங்களுக்கு சேதப்படுத்தியமை உள்ளிட்ட 707 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைத்த வண்ணம் உள்ளன.

இந்தநிலையில் இதுவரையில் 230 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு அவர்களில் 68 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

இதேவேளை, அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சாட்சியங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்ட நபர் ஒருவர் மொரட்டுவைப் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் மொரட்டுவை – மொரட்டுவைப் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கைதானவர், மொரட்டுவை மாநகர சபையில் சேவையாற்றும் 49 வயதுடைய ஊழியர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...